ஹெல்சின்கி: ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் ஆன்ட்ரி பெக்மேன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
பின்லாந்தின் ஹெல்சின்கி நகரில் ஆண்களுக்கான ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி, இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் ஆன்ட்ரி பெக்மேன் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 6–2 எனக் கைப்பற்றிய பாலாஜி ஜோடி, இரண்டாவது செட்டை 7–5 என சற்று போராடி தன்வசப்படுத்தியது. முடிவில் ஸ்ரீராம் பாலாஜி, பெக்மேன் ஜோடி 6–2, 7–5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.