Advertisement


அரையிறுதியில் மோகன் பகான்

ஆகஸ்ட் 27, 2023 22:04
 Comments  
 


mohan bagan, durand soccer
 

கோல்கட்டா: துாரந்த் கோப்பை கால்பந்து அரையிறுதிக்கு மோகன் பகான் அணி முன்னேறியது. காலிறுதியில் 3–1 என, மும்பை சிட்டி அணியை வீழ்த்தியது.

அசாம், மேற்கு வங்கத்தில், துாரந்த் கோப்பை கால்பந்து 132வது சீசன் நடக்கிறது. நேற்று, கோல்கட்டாவில் நடந்த காலிறுதியில் மும்பை சிட்டி, மோகன் பகான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் மோகன் பகான் அணியின் கம்மிங்ஸ் முதல் கோல் அடித்தார். இதற்கு, 28வது நிமிடத்தில் மும்பையின் பெரேரா தியாஸ் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட மோகன் பகான் அணிக்கு 30வது நிமிடத்தில் மன்விர் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் 2–1 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியின் 63வது நிமிடத்தில் மோகன் பகான் அணியின் அன்வர், தன்பங்கிற்கு ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய மும்பை அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் மோகன் பகான் அணி 3–1 என வெற்றி பெற்றது.

கோல்கட்டாவில் நடக்கவுள்ள அரையிறுதியில் வடகிழக்கு யுனைடெட் – ஈஸ்ட் பெங்கால் (ஆக. 29), கோவா – மோகன் பகான் (ஆக. 30) அணிகள் மோதுகின்றன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?