டுரின்: ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி தோல்வியடைந்து ஏமாற்றியது.
இத்தாலியின் டுரினில், ஆண்களுக்கான ஏ.டி.பி., சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, ருமேனியாவின் விக்டர் விலாட் கார்னியா, வெனிசுலாவின் லுாயிஸ் டேவிட் மார்டினஸ் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 4–6 என இழந்த இந்திய ஜோடி, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 6–3 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் டை பிரேக்கரில்’ ஏமாற்றிய இந்திய ஜோடி 7–10 என போராடி கோட்டைவிட்டது.
ஒரு மணி நேரம், 25 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ஸ்ரீராம் பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 4–6, 6–3, 7–10 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.