பெங்களூரு: ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் ஏமாற்றிய இந்திய வீராங்கனை அன்கிதா 2வது இடம் பிடித்தார்.
பெங்களூருவில், பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, செக் குடியரசின் பிரெண்டா புருஹ்விர்டோவா மோதினர்.
முதல் செட்டை 6–0 என மிகச் சுலபமாக கைப்பற்றிய அன்கிதா, இரண்டாவது செட்டை 4–6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டிலும் சொதப்பிய இவர், 0–6 எனக் கோட்டைவிட்டார்.
இரண்டு மணி நேரம், 19 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய அன்கிதா ரெய்னா 6–0, 4–6, 0–6 என்ற கணக்கில் தோல்வியடைந்து 2வது இடத்தை கைப்பற்றினார்.