பெங்களூரு: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் பைனலுக்கு முன்னேறினார் இந்தியாவின் அன்கிதா ரெய்னா. அரையிறுதியில் சக வீராங்கனை ருடுஜாவை வீழ்த்தினார்.
இந்தியாவின் பெங்களூருவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, சக வீராங்கனை ருடுஜா போசாலேவை சந்தித்தார்.
முதல் செட்டை 6–1 என எளிதாக கைப்பற்றினார் அன்கிதா. தொடர்ந்து அசத்திய இவர் அடுத்த செட்டையும் 6–1 என வசப்படுத்தினார். முடிவில் அன்கிதா 6–1, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் செக் குடியரசின் பிரெண்டா 7–6, 6–2 என்ற நேர் செட் கணக்கில் சுலோவேனியாவின் தலிலாவை வீழ்த்தினார். இன்றைய பைனலில் அன்கிதா, பிரெண்டா மோதவுள்ளனர்.