லண்டன்: ஏ.டி.பி., டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் போபண்ணா ஜோடி தோல்வியடைந்து வெளியேறியது.
இங்கிலாந்தின் லண்டனில், ஆண்களுக்கான ஏ.டி.பி., சின்ஸ் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் ஜோடி, பிரிட்டனின் லாய்டு கிளாஸ்பூல், பின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 5–7 என இழந்த போபண்ணா ஜோடி, பின் எழுச்சி கண்டு ‘டை பிரேக்கர்’ வரை சென்ற இரண்டாவது செட்டை 7–6 எனக் கைப்பற்றி பதிலடி தந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் டை பிரேக்கரில்’ ஏமாற்றிய இந்தியா–கனடா ஜோடி 4–10 எனக் கோட்டைவிட்டது. ஒரு மணி நேரம், 37 நிமிடம் நீடித்த போட்டியில் போபண்ணா, ஷபோவலோவ் ஜோடி 5–7, 7–6, 4–10 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றியது.