வார்சா: போலந்து செஸ் தொடரில் சாம்பியன் ஆனார் ஆனந்த்.
போலந்தின் வார்சா நகரில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. ஐந்து முறை உலக சாம்பியன் ஆன இந்தியாவின் ஆனந்த், அமெரிக்காவின் வெஸ்லே உட்பட 10 முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். முதலில் ‘ரேபிட்’ முறையில் போட்டிகள் நடந்தன.
சிறப்பு அனுமதியின் (‘வைல்டு கார்டு’) பேரில் களமிறங்கிய ஆனந்த், முதல் ஆறு சுற்றில், 5 வெற்றி, 1 ‘டிரா’ செய்திருந்தார். நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. 7வது சுற்றில் ஆனந்த், ருமேனியாவின் டேவிட் கவ்ரிலெசுவை சந்தித்தார். இதில் 25வது நகர்த்தலில் ஆனந்த் வெற்றி பெற்றார்.
எட்டாவது சுற்றில் ஆனந்த் இத்தாலியின் பேபியோ காருணாவை சந்தித்தார். இப்போட்டி 27வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது. எட்டு சுற்று முடிவில் 14 புள்ளி பெற்ற ஆனந்த், ஒரு சுற்று மீதமுள்ள நிலையில் முதலிடத்தை உறுதி செய்தார். கடைசி சுற்றில் ரிச்சர்டிடம் தோற்ற போதும், ஆனந்த் சாம்பியன் ஆனார். ஹங்கேரியின் ரிச்சர்டு ராப்போர்ட் (13), போலந்தின் டுடா (12) அடுத்த இரு இடம் பெற்றனர்.