ஷிம்கெண்ட்: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடரின் தகுதிச்சுற்றில் இந்திய வீரர் சசிக்குமார் முகுந்த் வெற்றி பெற்றார்.
கஜகஸ்தானின் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்திய வீரர் சசிக்குமார் முகுந்த், கஜஸ்தானின் எரேஜெப்பை 6–1, 6–0 என எளிதாக வீழ்த்தினார்.
அடுத்து நடந்த இரண்டாவது, கடைசி தகுதி போட்டியில் சசிக்குமார், ரஷ்யாவின் கஹோவை சந்தித்தார். இதன் முதல் செட்டை கடும் போராட்டத்துக்குப் பின் 7–5 என வசப்படுத்திய சசிக்குமார், அடுத்த செட்டை 6–3 என வென்றார். முடிவில் சசிக்குமார் 7–5, 6–3 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு தகுதிச்சுற் இரண்டாவது போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் காடே, ரஷ்யாவின் லஜரோவிடம் 4–6, 2–6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.