<?xml version="1.0" encoding="UTF-8"?>


<rss version="2.0" encoding="UTF-8">
  <channel>
    <title>Dinamalar Sports</title>
    <link>sdfsfsf</link>
    <description>All Sports News</description>
    
    <webMaster>webmaster@dinamalar.com</webMaster>    <item>
    <title> குணம் மாறாத சேவக் | மே  05, 2013</title>
    <link>http://sports.dinamalar.com/2013/05/1367752443/sehwagipldelhi.html</link>
    <description>இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக். தனக்கென ஒரு விதியை வைத்துக் கொண்டு, போனால் போகிறதென்று விளையாடுவார். சமீபகாலமாக மிக மோசமான முறையில் அவுட்டாக, இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.   ஆறாவது பிரிமியர் தொடரிலும் இப்படித்தான் ஏமாற்றுகிறார். முதலில் விளையாடிய 6 போட்டிகளில் 200 ரன்கள் மட்டும் எடுத்தார். மும்பைக்கு எதிராக திடீரென மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், 95 ரன் சேர்த்தார். மற்றபடி, 5 போட்டியிலும் பெரியளவில் சாதிக்கவில்லை.  தனது இழந்த "பார்மை' மீட்டு, இந்திய அணியில் இடம் பெறுவதற்கான எவ்வித நடவடிக்கையிலும் இவர் இறங்கியதாக தெரியவில்லை. இந்திய அணியில் இருந்த போது, பயிற்சியில் கால்பந்து விளையாடுவதை சேவக் அதிகம் விரும்புவாராம். சமீபத்தில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு தயாராக, டில்லி வீரர்கள் கால்பந்து விளையாடினர்.  ஆனால் சேவக் மட்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அனேகமாக இவர் ஓய்வு பெறுவதை நோக்கி செல்வதை காட்டுவது போல இது இருந்தது.</description>    
	</item>
    <item>
    <title> மும்பை ரசிகர்கள் திருந்துவார்களா | மே  05, 2013</title>
    <link>http://sports.dinamalar.com/2013/05/1367752336/cricketfansmumbai.html</link>
    <description>விராத் கோஹ்லியை மட்டுமல்ல, ஜாம்பவான் சச்சினையும் மும்பை ரசிகர்கள் கேலி செய்துள்ளனர்.   பெங்களூரு, மும்பை அணிகள் மோதிய பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டி மும்பையில் நடந்தது. இதில் பெங்களூரு கேப்டன் விராத் கோஹ்லி, ரன் அவுட் கேட்டதற்கு, மும்பை ரசிகர்கள் "துரோகி' என்று குரல் எழுப்பினர். இதுகுறித்து கோபமடைந்த கோஹ்லி,"" நான் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் போது, இதே ரசிகர்கள் எனக்கு உற்சாகம் அளிப்பார்கள்,'' என்றார்.  மும்பை ரசிகர்களை பொறுத்தவரை எப்போதுமே அளவுக்கு அதிகமாக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார். இதற்கு சில உதாரணங்கள்... கவாஸ்கர்: கடந்த 1987 உலக கோப்பை காலிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக சதம் (103, நாக்பூர்) அடித்து இருந்தார் கவாஸ்கர். மும்பையில் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்தின் இலக்கை (254/6) துரத்தியது இந்திய அணி. துவக்க வீரர் கவாஸ்கர் 4 ரன்னுக்கு அவுட்டாகி, பெவிலியன் திரும்ப, மும்பை ரசிகர்கள் இவரை இகழ்ச்சியாக பேசினர்.</description>    
	</item>
    <item>
    <title> காணாமல் போன இலங்கை வீரர்கள் | மே  05, 2013</title>
    <link>http://sports.dinamalar.com/2013/05/1367752208/srilankacricketipl.html</link>
    <description>ஆறாவது பிரிமியர் தொடரில், இலங்கை வீரர்களின் செயல்பாடுகள் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இதனால், பல வீரர்கள் அந்தந்த அணியில் இருந்து "காணாமல்' போய்விட்டனர்.   இந்தியாவில் நடக்கும் பிரிமியர் தொடரில், பஞ்சாப் தவிர, 8 அணிகளில் இலங்கை சார்பில் மொத்தம் 13 பேர் பங்கேற்றனர். இலங்கையில் நடந்த கடைசி கட்ட போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதால், துவக்கத்தில் இருந்தே தமிழக மண்ணில் காலடி வைக்க இலங்கை வீரர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.  இதனால், சென்னை அணியில் இடம் பெற்றிருந்த குலசேகரா, தனஞ்செயா இருவரும் வரவேயில்லை. பெங்களூரு அணியில் இருந்த முரளிதரன், 4 போட்டியில் 2 விக்கெட் மட்டும் வீழ்த்த, அத்துடன் மீண்டும் அணியில் இடம் பெறவில்லை. பேட்ஸ்மேன் தில்ஷன் இதுவரை 76 ரன்கள் தான் (5 போட்டி) எடுத்துள்ளார்.  மாத்யூஸ் "அம்போ': புனே அணியின் கேப்டன் மாத்யூஸ், 5 போட்டியில் 52 ரன்கள், ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்த, பின்ச்சிடம் பொறுப்பை தரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இலங்கை ராணுவ வீரர் அஜந்தா மெண்டிஸ், ஒரு போட்டியுடன் (1 விக்.,) ஒதுக்கப்பட்டார்.  மெண்டிஸ் "புஸ்ஸ்...': டில்லி அணியின் ஜீவன் மெண்டிஸ், 2 போட்டியில் 12 ரன்கள் மட்டும் எடுத்தார். கேப்டனாக உள்ள ஜெயவர்தனாவும் (209 ரன்) அ</description>    
	</item>
</channel></rss>